Thursday, June 25, 2009

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்!

20 நிமிடத்தில் சென்றடைந்து விடலாம் என்ற செய்தியை அறிந்து கொண்டு கோவில்பட்டியில் பேருந்தில் ஏறினோம் நானும் நண்பன் சேகரும். சுமாராக 30 நிமிடம் ஆகி இருக்கும். தென் தமிழ் நாட்டில் சில பகுதிகளைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்தவுடன், எங்கெங்கே போகவேண்டும் என்று தயாரான சிறு பட்டியலில் முக்கிய இடம் பிடித்திருந்த, எட்டையாபுரம் என்று வழங்கப்படுகிற 'எட்டயபுரம்' வந்தடைந்தோம்.

ஒவ்வொரு முறை பயணம் செய்யும்போதும், 'வாழ்வில் இதுவரை நான் சென்று வந்திராத ஒரு சிறு தெருவிலேனும் பயணிக்க வாய்ப்பிருக்கிறதா?' என்று யோசிப்பதுண்டு. தமிழகத்தில் மதுரையின் தெற்கே எங்கேயுமே சென்றிராத எனக்கு, இந்தப் பயணம், என் கேள்விக்கான நிறைய பதில்கள் அளிப்பதாக இருந்தது.

எட்டயபுரம்! 'காலா உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன் - என்தன் காலருகே வாடா சற்றே உனை மிதிக்கிறேன்' என்று பாடிய பாரதியைத் தந்த ஊர். அந்தப் பிரமிப்பு ஏதுமின்றி, இன்னுமொரு வளரும் சிறு நகரம் என்ற யதார்த்தத்துடன் நிற்கிறது எட்டயபுரம்.













எட்டயபுரத்தின் பேருந்து நிலையத்துக்கு மிக அருகிலேயே இருக்கிறது பாரதியார் மணி மண்டபம். 1947ல் உருவாக்கப்பட்டிருக்கிற இம்மணிமண்டபத்தில் முதலில் நம் கண்களில் படுவது வெறுமை. யாரோ சிலர் இளைப்பாறும் இடமாக அது மாறியிருக்கிறது. மண்டபத்தின் மத்தியில் தமிழக அரசால் நிறுவப்பட்ட பாரதியார் முழு உருவச்சிலை.பாரதி சிலையை மட்டும் நிழற்படம் எடுக்க அனுமதிக்கப்பட்டோம். பாரதி உடன் நின்று ஒரு நிழற்படம் எடுத்துக் கொண்டோம். இடப்பக்கத்தில் ஓர் அறையில் பாரதி சம்மந்தப்பட்ட நிழற்படங்கள், அவரின் கையெழுத்திலான சில கவிதைகள், கடிதங்கள் இவற்றைக் காட்சிக்கு வைத்திருந்தனர். அவற்றைப் படம் எடுக்க அனுமதி இல்லை.










மண்டபத்தை விட்டு வெளியே வந்த பொழுது மனதில் கொஞ்சம் அமைதி. பாரதி வீட்டுக்கு வழி கேட்டபடியே நடக்கத் தொடங்கினோம். மனம் ஒரு நூற்றாண்டு பின்னோக்கி ஓடிக்கொண்டிருந்தது. காசிக்குப் போகும் முன் பாரதி இந்த வீதிகளில்தானே ஓடி விளையாடி இருப்பான். அவனைக் கவிதை எழுதத் தூண்டிய காக்கைக் குருவிகளின் சந்ததி இப்போது எங்கே இருக்கும்? அவன் வெளிவிட்ட மூச்சுக்காற்று இன்னும் இங்கேயே சுழன்று கொண்டிருக்க வாய்ப்பிருக்கிறதா? கேள்விகளை அடுக்கியபடியே நடை போட்டோம்.

சில மனிதர்களோடு, ஓர் அறிவிப்புப் பலகையும் நாங்கள் பாரதியின் வீட்டைக் கண்டறிய உதவி செய்தது. அக்ரஹாரத் தெரு. மதிய நேரத்து அமைதியை அனுபவிக்க மறந்து, தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த மனிதர்கள். 'பாரதியின் வீடு' என்று பெயர்ப்பலகை மாட்டியிருந்த வீட்டை அடைந்தோம். கொஞ்சம் பரவசம். கொஞ்சம் அறியாமை, என்ன செய்வது என்று தெரியாமல். வீட்டுப் பொறுப்பாளர் மதிய உணவுக்காகச் சென்றிருப்பதாகத் தெரிந்தது. பக்கத்து வீட்டுக்காரரிடம் சொல்லிவிட்டு வீட்டினுள் நுழைந்தோம்.

'எங்கள் தலைமுறைக்குத் தமிழ் மீது காதல் ஏற்படுத்திவிட்டுப் போனவனே! உன் தமிழ்ச் சந்ததியின் இரு துளிகள் வந்திருக்கிறோம்' என்று சத்தமிட்டது மனது. வெளிப்புறத்தில் பாரதியின் கையொப்பமும், ஒன்றிரண்டு நிழற்படங்களும், காட்சிக்கு இருந்தன. வீட்டினுள் பாரதி, செல்லம்மா, பாரதியின் குடும்பம், பாரதியின் நண்பர்கள் இருந்த பல படங்கள் இருந்தன. பாரதி கைப்பட எழுதிய கடிதங்கள், கவிதைகள் சிலவும் இங்கேயும் இருந்தன.




















வீட்டின் ஒரு பகுதியில் 'பாரதி பிறந்த இடம்' என்ற வார்த்தைகளுடன் பாரதியின் மார்பளவுச் சிலை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அந்த இடத்தில் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற எங்களின் ஆர்வம் உடனே நடைமுறைப்படுத்தப்பட்டது. இதுவரை உணர்ந்திராத, இனம்புரியாத ஒரு சிலிர்ப்பு, பரவசம் என்னை ஆக்கிரமித்தது. அது சொல்லில் விளங்காதது. மீண்டும் அனுபவிக்க முடியாதது. இரவு முழுதும் பயணம் செய்த களைப்பை எல்லாம் தூரப்போட்டுவிட்டு துள்ளிக்குதித்தது மனது! 'பாரதி! நீ வாழும் காலத்தில் உன்னைப் புரிந்துகொள்ள யாரும் இல்லை. உன்னைக் கொஞ்சமேனும் புரிந்து கொண்டவர்கள் வந்திருக்கிறோம். உன் தமிழில் எங்களுக்கும் கொஞ்சம் கிள்ளிக் கொடுப்பாயா?' என்று ஏங்கியபடியே வெளியில் வந்தேன்.















லேசாகத் தூறத்தொடங்கியிருந்தது. வீட்டை வெளியிலிருந்தும் சில படங்கள் எடுத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டோம். பாரதியின் நாட்டுடமையாக்கப்பட்ட இந்த வீடு தமிழர் ஒவ்வொருவரும் கண்டிப்பாகப் பார்த்துவர வேண்டிய இடம் என்று பொதுப்படையாகச் சொல்ல மனம் ஒப்பவில்லை. குறைந்த பட்சம், இந்த மரியாதையை கூட அந்த மகாகவிக்கு வழங்கமுடியவில்லை என்றால் நாம் தமிழர் என்று தலை நிமிர்த்திச் சொல்வதில் அர்த்தமில்லைதான்(பொருளாதாரத்தால் முடிந்தவர்களாவது, பார்க்க முயற்சி செய்யலாம்).















இன்னும் கொஞ்சம் பராமரிப்பில் கவனம் வேண்டும் என்ற என் எண்ணத்தை வலுப்படுத்தின தெருவோரம் ஓடிக்கொண்டிருந்த சில பன்றிகள். அரசு மட்டுமில்லை. அருகிருக்கும் மக்களுக்கும் அந்த கவனம் தேவை!

பாரதியின் கவிதை வரிகள் சிலவற்றை மனதிற்குள் முணுமுணுத்தபடி, பேருந்து நிலையத்தில் காத்திருக்கும்போது ஏதோ ஒரு கடையில் பாடிக்கொண்டிருந்தது, 'வேதாளம் முருங்கை மரம் ஏறிச்சு!' என்ற பாடல். (இது கேலிக்காக எழுதப்பட்டதில்லை. உண்மையில் நடந்த விஷயம்). நண்பனிடம் சொல்லிச் சிரித்துக்கொண்டேன்.

மினி லாரியில் கோவில்பட்டிக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது, நண்பனுடன் பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்காததால் வேடிக்கை பார்த்துக் கொண்டே கொஞ்சம் பாரதியை அசை போட்டுக்கொண்டிருந்தேன். இன்னொரு கவிஞன் இப்படிக் கிடைப்பானா? இன்னொரு மனிதன் இப்படிப் பிறப்பானா? கேள்விகள் பதில் கிடைக்காமல் நீண்டுகொண்டிருந்தன.

பயணத்தின் அடுத்த கட்டம் நோக்கி மன அலைவரிசை மாறியது. இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டும். இன்னுமொரு வாய்ப்பு கிடைத்தால் எட்டயபுரம் வர வேண்டும். எண்ணங்கள் குவியத் தொடங்கின.

'எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்தநல் லறிவு வேண்டும்'

Monday, June 22, 2009

“தமிழர் மருத்துவமே வர்மக்கலை!

> “தமிழர் மருத்துவமே வர்மக்கலை!” - சித்த-வர்ம மருத்துவர்

“தமிழர் மருத்துவமே வர்மக்கலை!” - சித்த-வர்ம மருத்துவர் மூலச்சல் த.இராஜேந்திரன் நேர்காணல்

ஆயுர்வேதத்தில் பட்டம் பெற்ற குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவரான நண்பர் ஒருவருடன் உரையாடிக்கொண்டிருந்தேன். அவர் ஒரு நிகழ்வைச் சொன்னார். அதாவது, தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பட்டதாரி ஆயுர்வேத மருத்துவர் ஒருவர் அரசு மருத்துவராகப் பணி நியமனம் பெற்று குமரி மாவட்டத்திற்கு வந்துள்ளார். அவரிடம் மருத்துவம் பெறச்சென்ற நோயாளிகளில் பலரும் தம் நோய் குறித்த கூடுதல் தகவல்களைத் தெரிவிக்கும் நோக்கில், “பத்து வருசத்துக்கு முன்னுக்கு ஈரக்கொலைக்கிட்ட அடிபட்ட வர்மம் ஒண்ணு உண்டும்”, “நாலு வருசத்துக்கு முன்னுக்கு முதுகில அடிபட்ட வர்மம் ஒண்ணு உண்டும்” என்னும் விதமாகச் சொல்லியுள்ளனர்.

அவர் நமது நண்பரிடம் அது குறித்து விசாரித்துள்ளார், “என்னங்க ஒங்க ஊருல என்ன நோய்க்கி மருந்து வாங்க வந்தாலும் வர்மம், வர்மம்ணு சொல்லி மருந்து கேக்குறாங்க” என்று. கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகவும் சரளமாகப் புழங்கும் வர்மம், வர்மக்கலை போன்ற சொற்கள் ஒரு படித்த ஆயுர்வேத மருத்துவருக்கே புரியாத நிலையில், பாமர மக்களின் நிலை என்ன?. இந்தியன் போன்ற திரைப்படங்களிலும் கதைகளிலும்தான் அவர்கள் வர்மக்கலை பற்றி கேள்விப்பட்டிருக்க முடியும். அவர்களுக்கு வர்மக்கலை குறித்த விரிவான செய்திகளைத் தெரிவிக்க நாம் விரும்பியபோது, வர்ம மருத்துவத்தையே முதன்மையாக நடத்திவரும் மருத்துவர் மூலச்சல் த.இராஜேந்திரன் அவர்களை சந்தித்தோம்.

ஹோமியோபதியில் முதுநிலை (M.D.) பட்டம் பெற்ற, பரமபரை சித்த மருத்துவரான இவர் நாகர்கோவிலில் இருந்து அரைமணிநேர பயணத்தொலைவில் உள்ள தக்கலைக்கு அருகிலுள்ள மூலச்சல் என்ற கிராமத்தில் இராஜேந்திரா மருத்துவமனை என்ற பெயரில் மருத்துவமனை நடத்திவருகிறார். இங்கு இவர் அனைத்து நோய்களுக்கும் சித்த மருந்துகளை மட்டுமே பயன்படுத்திவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடனான உரையாடலின் ஒருபகுதி இது.


ஹோமியோபதி மருத்துவ முறையில் முதுநிலை பட்டம் பெற்ற நீங்கள் சித்த மருத்துவத்தை மேற்கொள்வது ஏன்?

இயல்பாகவே சித்த மருத்துவம் தழைத்தோங்கிய ஒரு சூழலில் பிறந்தவன் நான். சிறிய வயதிலேயே தற்காப்புக்கலையில் ஆர்வம் கொண்ட நான் களரி கற்றேன். அப்போது அதன் ஒருபகுதியாக மருத்துவமும் இருந்ததால், அது மிக எளிதாக நோய்களைத் தீர்க்கும் மூலிகை மருத்துவமாகவும் இருந்ததால் என்னுடைய ஆர்வம் அதிகமானது. பல சித்த மருத்துவ ஆசான்மாரை நான் தேடிச்சென்று கற்றேன். மிக இள‹ வயதிலேயே, அதாவது 12ஆம் வகுப்பு படிக்கும்போதே எலும்புமுறிவு கட்டுதல், தீராதென கருதப்பட்ட வாத நோய்களுக்கு மருந்தளித்தல் என நான் கற்ற மருத்துவத்தை பயன்படுத்தினேன். இவ்வாறாக சித்த மருத்துவம் என்பது என் இரத்தத்தோடும் சதையோடும் உணர்வோடும் இரண்டறக் கலந்துவிட்டதால் நான் எந்தவொரு நோய்க்கு மருந்து தேடினாலும் அது இயல்பாகவே சித்த மருந்தாகவே அமைந்துவிடுகிறது.


சித்த மருத்துவம் பயின்ற நீங்கள் எதற்காக ஹோமியோபதி படித்தீர்கள்?

கல்லூரியில் இளநிலை வேதியியல் பயின்ற நான் அதன்பின்னர் ஹோமியோபதியில் பட்டயம் பெற்றேன். பின்னர் பெங்களூரிலுள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பிலும் சேர்ந்தேன். அது நான் மருத்துவத்தில் வளர்ந்துவரும் நேரமாகவும், நான் மருத்துவம் செய்தது ஆங்கில மருத்துவத்தால் இயலாதென கைவிடப்பட்ட நோய்களாகவும் இருந்ததால் நான் மருத்துவத்தைக் கைவிடாமல் தொடர்வதே சிறந்தது என எனது பேராசிரியர்கள் அறிவுறுத்தியதால் அப்படிப்பைக் கைவிட்டேன்.

முன்னரே அறிவியல்பூர்வமானதாக, மிக வளர்ந்ததாக இருந்த மருத்துவ முறையாக சித்த மருத்துவத்தைக் கற்றுத் தேர்ந்திருந்தாலும் நவீன மருத்துவ அறிவும் பெற்றிருந்தால் அது இரண்டையும் இன்றைய சூழலில் பொருத்திப் பார்க்க உதவும் என்றதாலேயே நான் நவீன மருத்துவம் என்று கருதப்படும் மருத்துவமுறைகளையும் கற்றேன்; கற்க விரும்புகிறேன்.


ஆங்கில மருத்துவத்தால் கைவிடப்பட்ட எத்தகைய நோய்களுக்கு நீங்கள் மருந்தளித்துள்ளீர்கள்?

பெருமூளைச்சுருக்கம் (Cerebral atrophy), சிறுமூளைச் சுருக்கம் (Cerebeller atrophy), பக்கவாதம் (Hemiplegia), அரைகீழ்வாதம் (Paraplegia), கழுத்தெலும்பு உடைவால் ஏற்படும் Quatriplegia, முதுகெலும்பில் ஏற்படும் Traumatic Paraplegia, முதுகெலும்பு தட்டில் ஏற்படும் புறந்தள்ளல் (Disc Prolapse), வீக்கம் (Bulging), எலும்பு தேய்வுகள் (Spondylosis), குழந்தைகளின் எலும்பு தானாகவே சிதைவது (Osteomimylitis), குழந்தைகளின் மூளை வளர்ச்சி குறைவு, கால்சியம் பற்றாக்குறையால் ஏற்படும் எலும்பு முறிவு, முதுகெலும்பில் ஏற்படும் காசநோய், நரம்புநோய்கள் என ஆங்கில மருத்துவத்தால் கைவிடப்பட்ட பல கடுமையான நோய்களை நாங்கள் குணப்படுத்தினோம். இதனால், நமது மருத்துவம் சிறந்தது, இதில் எல்லா நோய்களுக்கும் மருந்து இருக்கிறது என்ற நம்பிக்கை ஏற்பட்டது. நமது மருத்துவத்தில் உலகின் அனைத்து நோய்களுக்கும் மருந்து உள்ளது. நவீன மருத்துவ அறிவும் சித்த மருந்துகளும் சேர்ந்தால் அளவிடற்கரிய சாதனைகளைச் செய்யமுடியும். குறிப்பாக, மிக சிக்கலானதாகக் கருதப்படும் Degenerative disease எனப்படும் நோய்களுக்கு நமது வர்ம மருத்துவத்தில் சிறந்த மூலிகை மருந்துகள் உள்ளன.


திரைப்படங்களில் பார்க்கும்போது வர்மக்கலை என்பது மர்மமான முறையில் எதிரிகளைத் தீர்த்துக்கட்ட பயன்படும் கொலைகருவி என்றே தோன்றுகிறது. வர்மக்கலை என்பது அதுதானா?

வர்மக்கலை என்பது முழுக்க முழுக்க தற்காப்பும் மருத்துவமும் சேர்ந்த கலையே. பழங்காலத்தில் அது மருத்துவத்திற்கும் தற்காப்பிற்கும் பயன்படுத்தப்பட்டதால் ஆபத்தான கலையாக கருதப்படுகிறது. அடிப்படையில் மனித உடலின் மிகமுக்கியமான, ஆபத்தான இடங்கள் வர்மத்தில் குறிக்கப்படுவதால் வர்மக்கலையைக் கற்ற யாரும் அந்த இடங்களைத் தாக்கி செயலிழக்கச்செய்ய, பின்விளைவுகளை ஏற்படுத்த முடியும் என்ற உண்மையை உணர்ந்ததால் பழங்காலத்தில் ஆசான்மார் கட்டுப்பாடுடைய சீடர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தனர். எனவே, இதன் மருத்துவ பகுதியும்கூட முழுமையாக மக்களை எட்டவில்லை.

இந்த வர்ம மருத்துவப் பகுதியில் தீர்க்க முடியாத, விபத்துகளால் ஏற்பட்ட பல்வேறு நோய்கள், பின்விளைவுகளான (Post complications) காக்கைவலிப்பு, மயக்கம், தீராத தலைவலி, காயவாதம் (Traumatic arthritis), பேசமுடியாமை (Disarchria) போன்றவை வராமலேயே தடுக்கக்கூடிய எண்ணற்ற மருந்துகள் உள்ளன.

இதன் மற்றொரு பகுதியான தற்காப்புப்பகுதியில் குறிப்பிட்ட இடத்தைத் தாக்கி மயக்கமுறச் செய்தல், உறுப்புகளைச் செயலிழக்கச் செய்தல், உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய புள்ளிகளாக 64 இடங்கள் தற்காப்பிற்காக குறிக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற இடங்களில் தாக்கப்பட்டோரை எழுப்ப அடங்கல்கள் என்ற முக்கியமான 108 இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. குமரி மாவட்டத்தைப் பொறுத்தளவில் ஏராளமானோருக்கு சாதாரணமாகத் தெரிந்த விசயம் இது.


வர்மக்கலை எங்கே தோன்றியிருக்கவேண்டும்?

வடஇந்தியாவைச் சேர்ந்த சுஸ்ருதர், வார்படர், சரகர் போன்றோரின் மருத்துவ நூல்களிலும் வர்மக்கலை பற்றிய குறிப்புகள் உள்ளன. எனினும் அவற்றில் குமரி மாவட்ட ஏட்டுச்சுவடிகளில் காணப்படுவதுபோல ஆபத்தான புள்ளிகள், அடங்கல்கள், இளக்குமுறை, மருத்துவம், தடவுமுறை என முழுமையான செய்திகள் இல்லை.

மேலும் தென்தமிழகத்தில் உள்ள பார்த்திபகேசரம் என்ற இடத்தில் வர்ம மருத்துவத்தையும், தற்காப்புக் கலையையும் கற்றுத் தருவதற்கு என தனி பல்கலைக்கழகமே செயல்பட்டு வந்துள்ளது. இங்கு இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் வந்து பயின்றுள்ளனர். இங்கு பயின்றோரை மன்னர்கள் மெய்க்காப்பாளர்களாக வைத்துள்ளனர்.

பழங்காலத்தில் மனித வள௱ச்சிப்போக்கில் உருவான இக்கலை பல ஆசான்களால் செம்மைப்படுத்தப்பட்டு, சித்தர்களால் செவிவழிச்செய்திகளாகப் பாதுகாக்கப்பட்டு, பிற்காலத்தில் மரம் ஏறுதலைத் தொழிலாகக் கொண்டவர்களால் பயன்படுத்தப்பட்டது. அவர்களிடமே இதுதொடர்பான சுவடிகள் ஏராளமாக உள்ளன. இன்றும் இங்கு ஆசான் என்று அழைக்கப்படும் வர்ம வல்லுநர்களால் குரு-சீடர் முறைப்படி வர்மக்கலை பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது.

ஆக, இப்போதிருக்கும் ஆதாரங்களின்படி வர்மக்கலைக்கு மனித இனம் முதன்முதலாகத் தோன்றியதாகக் கருதப்படும் குமரிக்கண்டம், மற்றும் அதன் இன்றைய எச்சமுனையான குமரி மாவட்டமே தாயகமாக இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது.


சித்த மருத்துவ முறையின் எதிர்மறை அம்சங்களாக எவற்றைக் கருதுகிறீர்கள்?

* சித்த மருத்துவ அறிவியலானது பரவலாக புரிந்துகொள்ளப்படவில்லை, பரப்பப்படவில்லை. மாறாக மறைக்கப்பட்டது. ஆனால் ஆங்கில மருத்துவமானது எளிமையாக பலருக்கும் பயிற்றுவிக்கப்பட்டது. மேலும் சித்த மருத்துவ மாணவர்களுக்கே தம் மருத்துவம் மீது முழுமையான நம்பிக்கை இல்லை.

* சித்த மருத்துவர்கள் தங்கள் சக மருத்துவர்களை சமமாக மதிக்காத போக்கு

* பல மருத்துவர்கள் தமக்கு அனுபவரீதியாக நன்கு தெரிந்த ஓரிரு மருந்துகளைத் தவிர தமது துறைதொடர்பாக விரிவாக அறிந்துகொள்ள விரும்பாமல் இருப்பது

* சித்த மருத்துவ நூல்கள் முழுமையாக தொகுக்கப்பட்டு சீர்செய்யப்படாமல் இருப்பது

* மருத்துவம் கற்றுக்கொடுக்கும் ஆசான்மாரும், பேராசிரியர்களும் மாணவர்களின் ஆய்வுக் கண்ணோட்டத்தை ஊக்குவிக்காதது

* வளர்ச்சியுற்ற நவீன மருத்துவ அறிவியலோடு முழுமையாக ஒப்புமைப்படுத்தப்படாத கல்வி, முறைப்படுத்தப்படாத மிகப்பழைய பாடத்திட்டம்

என பலவற்றை நாம் குறிப்பிடலாம். இத்தகைய தடைகள் அனைத்தையும் தாண்டி நமது மருத்துவம் வள௱ந்துவருகிறது என்பதுதான் உண்மை. நமது தங்க பற்பம், வெள்ளி பற்பம் முதலானவை சிறுநீரகத்தை கேடடையச்செய்துவிடும் என்று ஆங்கில மருத்துவர்களும், விஞ்ஞான மேதைகளும் கருத்து கூறி வருகின்றனர். ஆனால், இன்று அயல்நாடுகளில் Ash method என்ற முறையில் தங்கமும், வெள்ளியும் பற்பமாக்கப்பட்டு ஆங்கில மருந்துக் கடைகளிலேயே விற்பனைக்கு வந்துள்ளன. அங்குள்ள ஆங்கில மருத்துவர்களும் இவற்றைப் பரிந்துரைத்து வருகிறார்கள்.

எனவே, தங்க பற்பம் போன்ற உலோகக்கலவை மருந்துகளை சரியாகச்செய்து முடித்த பின்னர் அதன் அளவுகளை மிகச் சரியாக நிர்ணயித்து மருத்துவம் செய்ய வேண்டுவது நம் மருத்துவர்களின் முக்கிய கடமையாகும்.

நமது சித்த மருத்துவம் என்பது முழு வளர்ச்சியடைந்த மருத்துவ அறிவியல். இனி புதிதாகவரும் நோய்களுக்கான மருந்துகளும் இதில் உள்ளன. இன்றைய தேவை ஆய்வு நோக்கில், அறிவியலின் வெளிச்சத்தில் சித்த மருந்துகள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு அவற்றின் உட்கொள்ளும் அளவுகள் தௌ¤வாக்கப்பட்டு எல்லோருக்கும் பயன்படும்வண்ணம் செய்யப்படவேண்டும்.


வர்ம மருத்துவ முறைப்படியான எலும்பு முறிவு சிகிச்சை பற்றி...

சித்த - வர்ம மருத்துவத்தில் எலும்பு முறிவு என்பது மிகவும் சாதாரண மருத்துவம். எந்த வகையான உள் மருந்துகளும் அளிக்கப்படாமல், மூலிகை, வெளிப்பிரயோக மருந்துகள் மூலம், எவ்விதத் தழும்புகளோ அடையாளங்களோ இல்லாமல் மிகக் குறுகிய காலத்தில் எலும்புமுறிவுகளை குணப்படுத்த இயலும். குமரி மாவட்டத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர்களில் 80% பேருக்கு எலும்பு முறிவு மருத்துவம் என்பது மிகவும் சாதாரண விசயம். குமரியில் இதற்கு அக மருந்துகளே அளிக்கப்படுவதில்லை.

மிக எளிய முறையில் அடங்கல்களைத் தட்டி எழுப்புவதன் மூலம் ஆபத்து உயிர்காப்பு மருத்துவத்தை மேற்கொண்டுவந்தவர்கள் சித்த மருத்துவர்கள். உயிர்காப்பு மருத்துவத்திற்கு கண்டூசம் போன்ற மருந்துகள் பயன்படுத்தப்பட்டன. எலும்பு முறிவு, மூட்டு விலகல்களை சரிசெய்வது போன்றவை மிகவும் சாதாரணமாக செய்யப்பட்டுவந்தன. எங்கள் மருத்துவமனையிலேயே இதுவரை இத்தகைய ஆயிரக்கணக்கான நோயாளிகள் குணப்படுத்தப்பட்டுள்ளனர். அறுவை சிகிச்சை செய்தும் குணமாகாதவை, பல மாதங்களாகியும் சரியாகாதவை போன்ற எலும்பு முறிவுகளும் வர்ம முறைப்படி எளிதில் குணமாக்கப்படுகின்றன. இதில், மிகவும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய விசயம் என்னவென்றால் எத்தகைய எலும்பு முறிவாக இருந்தாலும், அறுவைச் சிகிச்சை இன்றி குறைந்த செலவில் வர்ம முறைப்படி குணப்படுத்தலாம்.


இன்றைய சூழலில் வர்மக்கலை எப்படி வாழ்வில் பயன்படும்?

* மிகமிகக் குறைந்த செலவில் எலும்பு முறிவு மருத்துவம் செய்ய வர்ம மருத்துவம் துணை செய்கிறது. முறையாக ஆய்வு செய்யப்பட்டால் ஏழை மக்களுக்கு பெரும் பயனளிக்கும் மிகச்சிறந்த மருத்துவமாகஇது திகழும்.

* எலும்பு முறிவினால் பாதிக்கப்பட்டு வரும் பின்விளைவுகள், உறுப்புகள் செயல்பாடின்மை, மேலும் அறுவை சிகிச்சை செய்தும் பயனளிக்காது என்று கைவிடப்பட்ட பல நோய்களை வர்ம மருத்துவத்தால் தீர்க்க முடியும். நோய்களால் ஏற்படும் பல எலும்புமுறிவுகளையும் (Pathological Fracture) சரிசெய்ய முடியும்.

* வர்ம மருத்துவத்தில் நரம்பு நோய்களுக்கான மருத்துவம் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு, அனுபவரீதியாகப் பயன்படுத்தப்பட்டும் வருகிறது.

* வர்ம மருத்துவ அடிப்படையிலான தடவுமுறைகள், பூச்சு முறைகள், ஒத்தட முறைகள், வேது பிடித்தல், கட்டு போடுதல் போன்றவை மருந்தில்லா மருத்துவமாகப் பயன்படுத்தப்பட்டுவருவது இதன் சிறப்பம்சமாகும்.

* குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் போன்றோரை எவ்வாறு தடவ வேண்டும், எந்தெந்த இடங்களைத் தூண்டவேண்டும் என்பன போன்ற தௌ¤வான விள௧கங்கள் இம்மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளன. இதன் தடவுமுறையால் ஏராளமான ஆற்றலை உடலில் உருவாக்க முடியும் என்பதை எங்களின் அனுபவரீதியிலாகக் கண்டறிந்துள்ளோம்.

* விக்கல், வாந்தி, சன்னி, மயக்கம், நாக்கு புறந்தள்ளல், நாக்கு உள்ளே இழுக்கப்படுதல், பைத்தியம்போல் பேசுதல் போன்ற பல்வேறு வர்ம விளைவுகளை அவற்றின் அடங்கல்களை தூண்டுவதன் மூலம் கண்ணிமைக்கும் நேரத்தில் தீர்க்க இம்மருத்துவ முறையால் முடியும். பார்ப்போருக்கு இது ஏதோ கண்கட்டு வித்தை போலத் தோன்றும்.


வர்மக்கலைக்கும் சித்த மருத்துவத்திற்கும் என்ன தொடர்பு?

வர்மக்கலை என்பது சித்த மருத்துவ அறிவியலை முழுமையாகக்கொண்ட ஒரு மருத்துவ முறையாகும். சித்த மருத்துவத்தில் விளக்கப்படாத, சித்தர்களால் மிக மறைவாக வைக்கப்பட்டுள்ள பல விசயங்களுக்கு வர்ம மருத்துவத்தில் விளக்கம் பெற இயலும். பல சித்த மருத்துவ இரகசியங்கள் மிகத் தௌ¤வாக விளக்கப்பட்டுள்ளன. சித்த அறிவியலை முழுமையாகப் புரிந்துகொள்ள வர்மக்கலை அறிவு அவசியம். எனவே, வர்மக்கலை தெரிந்தவர்கள் மட்டுமே முழுமையான சித்த மருத்துவர்களாக ஆகமுடியும். குமரி மாவட்ட சித்த மருத்துவர்களில் மிகப் பெரும்பாலானோருக்கு வர்மக்கலை என்பதும் இயல்பாகவே கைவந்த கலையே.

சித்த மருத்துவம் மருந்துகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது. அதில், வேதி பொருட்கள், உலோகங்கள் முதலானவை மிகச்சிறந்த மருந்துகளாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதேவேளை, குமரி மாவட்டத்திலுள்ள வர்மச் சுவடிகளில் பெரும்பாலும் மூலிகை மருந்துகளே குறிப்பிடப்பட்டுள்ளன, பயன்படுத்தப்பட்டுவருகின்றன.


நீங்கள் சொல்லும் தடவு முறைக்கும் ஆங்கில மருத்துவ அடிப்படையிலான பிசியோதெரபிக்கும் என்ன வேறுபாடு?

நமது உடலின் இயல்பான இயக்கத்திற்கு ஏற்ப உடல் உறுப்புகளை அசைத்து சீர்செய்வது மேற்கத்திய மருத்துவ முறையின் தற்கால வள௱ச்சியில் ஒன்றாகும். ஆனால், நமது வர்ம மருத்துவத்தில் பல்லாயிரம் ஆண்டுகாலமாகவே பல்வேறுவிதமான தடவு முறைகள், உடல் இயக்க முறைகள் பயன்படுத்தப்பட்டுவருகின்றன. வெவ்வேறு நோய்களுக்கான தடவு முறைகள், மருந்துகள், தூண்டப்படவேண்டிய ஆற்றல் புள்ளிகள் போன்றவை வர்ம மருத்துவச் சுவடிகளில் உள்ளன, அவற்றை நாங்கள் அனுபவரீதியாகப் பயன்படுத்திவருகிறோம்.


வர்மக்கலை இனியும் மர்மமாகத்தான் இருக்க வேண்டுமா?

தவறானவர்களால் பயன்படுத்தப்பட்டுவிடும் என்ற நேர்மையான அச்சத்தால் இனியும் இதனை மூடி மறைத்தால் நமக்கு மிக எளிதாக, மலிவாகக் கிடைக்கவிருக்கிற மருத்துவ பயனையும் இழந்துவிடுவோமோ என்று தோன்றுகிறது. இன்னும் நான்கு பேருக்கு தெரிந்துவிட்டால் நமக்கு தொழில் நடக்காதோ என்பது போன்ற எதிர்மறையான அணுகுமுறை, அச்சம் இனியும் தேவையில்லை. இம்மருத்துவம் வெளிப்படுத்தப்பட்டால் பல்லாயிரம் உயிர்கள் பாதுகாக்கப்படும் என்ற உயர் மனிதநேய சிந்தனையே இப்போது நமக்குத் தேவை. குறிப்பாக, இதன்மூலம் ஏழை மக்களுக்கு நாம் பெருந்தொண்டு செய்ய முடியும்.


இத்துறையின் வள௱ச்சிக்கு என்ன செய்யப்பட வேண்டும் என்று கருதுகிறீர்கள்? நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

குடிமக்கள் நலனே முக்கியம் என்று எண்ணம் அரசுக்கு வரவேண்டும். நம் மருத்துவமான சித்த மருத்துவத்திற்கு என்று தனி பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படாதது மிகப்பெரிய குறை. அதுபோல நவீன அறிவியல் வெளிச்சத்தில் சித்த மருந்துகளை ஆய்வு செய்வதற்கென்று தனிச்சிறப்பான ஆய்வு மையங்கள் உருவாக்கப்படவேண்டும்.

சித்த மருத்துவ பாடத்திட்டங்கள் மேலும் சீராக்கப்பட்டு நம் தாய் மருத்துவத்தின் சிறப்புகளும் பயன்களும் சாதாரண மக்கள் முதல் படித்த மேதைகள் வரை தௌ¤வாக உணரும்வண்ணம் அரசு நடைமுறைப்படுத்தவேண்டும்.

அயல் நாடுகளில் நம் மருத்துவத்துறைகள் வளர்க்கப்பட்டு, இதன் பெருமைகள் பறைசாற்றப்படவேண்டும். நம் மருத்துவத்தின் உயர்ந்த மருந்துகள் சித்தர்களால் எத்தனை சிறப்பாக கையாளப்பட்டனவோ அத்தனை சிறப்போடு ஆய்வு செய்து அதனால் உலகின் பல பகுதி மக்களும் உணர்ந்துகொள்ள௩ செய்வது அரசு மற்றும் துறை பயிலும் அறிஞர்கன் கடமையாக இருக்கவேண்டும்.

தமிழகத்திலிருந்து கடத்திச்செல்லப்பட்டு, ஜெர்மனி போன்ற நாடுகளில் சிறைவைக்கப்பட்டிருக்கும் பல இலட்சக்கணக்கான சித்த மருத்துவ ஓலைச்சுவடிகள், நூல்கள் போன்றவற்றை தமிழகம் கொண்டுவருவதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பல மாணவர்கள் என்னிடம் குருகுலம் போல உடனே தங்கியிருந்து மருத்துவம் கற்றுள்ளார்கள். தற்போது எங்களது இராஜேந்திரா சமுதாயக் கல்லூரியின் மூலம் பல்கலைக்கழக சான்றிதழுடன் வர்ம தடவுமுறை, மூலிகை மருத்துவம் போன்றவை குறித்த பட்டயப் படிப்புகளை நடத்தி வருகிறோம். மாதந்தோறும் சித்த வைத்தியர்களுடனான சந்திப்பு, கலந்துரையாடல் நிகழ்ச்சிகளை நடத்திவருகிறோம்.


(இந்நேர்காணல் தமிழக சட்டக்கல்லூரி மாணவர்களால் நடத்தப்பட்டுவரும் விழிப்புணர்வு மாத இதழில் வெளியானது.)


மருத்துவர் த. இராஜேந்திரனுடன் தொடர்பு கொள்ள...

செல்பேசி: 94431 65034

தொலைபேசி: 04651 250343, 252243
----------------------------------------------------------------------
Copyrightthinnai.com

Friday, June 19, 2009

தோற்றது இந்தியாவின் ராஜதந்திரம்தான்! - தினமணி கட்டுரை

10:26 AM by devaraj · 0 comments
Labels:

தோற்றது இந்தியாவின் ராஜதந்திரம்தான்! - தினமணி கட்டுரை

-பழ. நெடுமாறன்

லங்கையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த போர் முடிவடைந்துவிட்டது. விடுதலைப் புலிகளை முற்றாகத் தோற்கடித்து விட்டோம் என, இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இந்திய அரசும் அதற்குப் பாராட்டுத் தெரிவித்துவிட்டது. ஆனால் இலங்கைப் போரில் புலிகள் தோற்றார்களா இல்லையா என்ற கேள்விக்குரிய விடையைவிட இந்தியாவின் ராஜதந்திரம் வெற்றி பெற்றதா இல்லையா என்ற கேள்விக்குரிய விடையை அறிவதுதான் முக்கியமானதாகும்.

1980-களில் தொடங்கி இன்று வரை இலங்கையில் தங்களது மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ளவும் இந்துமாக்கடலின் முக்கியக் கடல், வான் பாதைகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரவும் அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையே நடைபெற்று வந்த ஆதிக்கப் போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்துள்ளது.

1977-ம் ஆண்டு ஜயவர்த்தனவின் ஐக்கிய தேசியக் கட்சி இலங்கையின் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபோது இந்தியாவின் மேலாதிக்கத்தில் இருந்து விடுபட விரும்பியது. அதற்கு ஒரே வழி அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளுடன் உள்ள உறவுகளை வலுப்படுத்துவதேயாகும் எனத் திட்டமிட்டு செயல்பட்டது. இலங்கையின் பொருளாதாரம் மேற்கு நாடுகளுக்கு திறந்துவிடப்பட்டது. இதன் விளைவாகத் தமிழர்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளுக்கு மேற்கு நாடுகள் உதவத் தொடங்கின.

1983-ம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்கா உதவியுடன் இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் சின்பெத் உளவுப்படையான மொசாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் இலங்கைக்கு வந்து சிங்கள ராணுவத்துக்குப் பயிற்சி அளித்தனர். பிரிட்ட னைச் சேர்ந்த சிறப்பு விமானப் படையின் நிபுணர்கள் சிங்கள விமானப் படை விமானிகளுக்கு தமிழர் பகுதிகளில் குண்டு வீசப் பயிற்சி அளித்தனர்.

பிரிட்டனைச் சேர்ந்த தனியார் நிறுவனமான கீனி மீனி சர்வீசஸ், சிங்கள ராணுவத்தில் சிறப்பு அதிரடிப்படையை உருவாக்க பயிற்சி அளித்தது. தென்னாப்பிரிக்க அரசு மூலம் இங்கிலாந்து சிங்கள ராணுவத்துக்குத் தேவையான தளவாடங்களை அனுப்பியது.

இலங்கையில் மேற்கு நாடுகளின் ஆதிக்கம் வளர்ந்தோங்கிய நிலையில் இந்திய அரசின் கருத்துகள் எதற்கும் சிங்கள அரசு மதிப்புக் கொடுக்கவில்லை. எனவே அதற்கு எதிராக சிங்கள அரசை மிரட்டுவதற்காக பிரதமர் ராஜீவ் காந்தி காலத்தில் அதாவது 1987-ம் ஆண்டு ஜூன் மாதம் 4-ம் தேதி இந்திய ராணுவ விமானங்கள் முற்றுகைக்கு ஆளாகியிருந்த யாழ்ப்பாணத்தின் மீது பறந்து சென்று உணவுப் பொதிகளை வீசின. இதைக் கண்டு சிங்கள அரசு அச்சம் அடைந்தது. 1987-ம் ஆண்டு ஜூலை 27-ம் தேதி இந்திய-இலங்கை உடன்பாட்டில் கையெழுத்து இட்டாக வேண்டிய நெருக்கடி ஜயவர்த்தனவுக்கு ஏற்பட்டது. இந்த உடன்பாட்டின் சாரம் பின் வருமாறு அமைந்தது:

‘இலங்கைக்கு இந்தியா தனது படையை அனுப்பி தமிழ்ப் போராளிகளின் ஆயுதங்களைக் களைய உதவும். இலங்கையில் அமைதிக்கான சூழ்நிலையை உருவாக்கித் தரும். இதற்குப் பிரதிபலனாக இலங்கையில் உள்ள அனைத்து வேற்றுநாட்டு ராணுவக் குழுக்களை இலங்கை அரசு வெளியேற்ற வேண்டும்’ என்பதே இந்த உடன்பாட்டின் அடிப்படையாகும்.

இதன் மூலம் ஜயவர்த்தன இரண்டு உண்மைகளைப் புரிந்து கொண்டார். 1. இந்திய அரசை நேரடியாகப் பகைத்துக் கொண்டு நிம்மதியாக இருக்க முடியாது. 2. மேற்கு நாடுகளை நட்பு சக்திகளாகப் பெற்றால் இந்தியாவின் தயவு இல்லாமல் தமிழ்ப் போராளிகளை முறியடித்துவிட முடியும் என்ற அவரின் திட்டம் வெற்றி பெறவில்லை.

இந்திய அரசு அவரை மிரட்டியபோது மேற்கத்திய நாடுகள் ஒன்றுகூட அவருக்கு உதவ முன்வரவில்லை. சின்னஞ்சிறிய இலங்கைக்காகத் தங்கள் பொருள்களின் விற்பனைக்கான மிகப் பெரிய சந்தை நாடான இந்தியாவுடன் முரண்பட மேற்கு நாடுகள் தயாராகவில்லை என்பதே உண்மையாகும்.

மேற்கண்ட இரு கசப்பான உண்மைகளை உணர்ந்து கொண்ட சிங்கள அரசு இந்தியாவிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள கிழக்கு நோக்கித் திரும்பிற்று. மேற்கு நாடுகள் அவரைக் கைவிட்ட பிறகு இந்தியாவின் பகை நாடான சீனாவின் உதவியை நாட அது முடிவு செய்தது. அதிலிருந்து தொடங்கி சீனாவின் சார்பு நாடாக இலங்கை படிப்படியாக உருவெடுத்தது.

1993-ம் ஆண்டு இலங்கையில் உள்ள கல்லே துறைமுகத்தில் சீனாவின் நோரிங்கோ நிறுவனம் மிகப் பெரிய ஆயுதக் கிடங்கு ஒன்றைத் திறப்பதற்கான உடன்பாடு கையெழுத்திடப்பட்டது. இந்த உடன்பாட்டின்படி சிங்கள அரசு தனக்குத் தேவையான ஆயுதங்கள் அனைத்தையும் இந்தக் கிடங்கிலிருந்து பெற்றுக் கொள்ளலாம். ஆனால் வேறு எந்த நாட்டிடமிருந்தும் ஆயுதங்களை வாங்கக் கூடாது. அப்படி வாங்குவதற்கு நோரிங்கோவின் அனுமதி தேவை.

இலங்கையில் சீனாவின் ஆயுதக்கிடங்கு அமைவது என்பது இந்தியாவுக்கு மட்டுமல்ல, தென் ஆசியப் பகுதிக்கே ஆபத்தானதாகும். இப்பகுதியில் உள்ள நாடுகளுக்குத் தேவைப்படும் போது உடனுக்குடன் ஆயுத உதவிகளைச் சீனா செய்யமுடியும்.

தென் இலங்கையில் உள்ள ஹம்பன்தோட்டா துறைமுகத்தை விரிவுபடுத்துவதற்கும் அங்கு ராட்சத எண்ணெய்க் கலன்களை அமைப்பதற்கும் புத்தளத்துக்கு அருகே நோரோச் சோலையில் 9000 மொகாவாட் திறனுள்ள அனல் மின் நிலையம் ஒன்றை அமைப்பதற்கும் உதவும்படி இலங்கை அதிபர் சந்திரிகா 2005-ம் ஆண்டில் வேண்டிக் கொண்டார். சீனா பெரும் மகிழ்ச்சியுடன் இக் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டது.

ஏனெனில் ஹம்பன்தோட்டா துறைமுகம் சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் வரும்போது இந்துமாக்கடலில் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து சீனா நோக்கிச் செல்லும் எண்ணெய்க் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்யமுடியும். நோரோச் சோலையில் அனல்மின் நிலையம் அமைக்கும் பணியில் ஈடுபட்டால் அதற்கு 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சேதுக் கால்வாயை தனது கண்காணிப்பின் கீழ் கொண்டுவர முடியும்.

2006-ஆம் ஆண்டு இறுதியில் மன்னார் வளைகுடாவில் பெட்ரோலியம் உள்ளதா என்பதை ஆய்வு செய்வதற்கான துரப்பணி அனுமதியை எவ்வித டெண்டரும் இல்லாமல் சீனாவுக்கு இலங்கை அளித்தது. இதற்காக ஒதுக்கப்பட்ட இடம் சேதுக் கால்வாயிலிருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் சேதுகால்வாயில் செல்லும் அனைத்து நாட்டு சரக்குக் கப்பல்கள் மற்றும் இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான கப்பல் ஆகியவற்றை சீனா தொடர்ந்து கண்காணிக்க முடியும்.

1974 ஜூலை 8-ம் தேதி இந்திரா காந்தி காலத்தில் செய்து கொள்ளப்பட்ட இந்திய-இலங்கை உடன்பாட்டின்படி இந்தத் துரப்பணப்பணியை இந்தியாவும் இலங்கையும் கூட்டாக மேற்கொள்ள வேண்டும். ஆனால் அந்த உடன்பாட்டை மீறும் வகையில் இந்தப் பணி சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

வான்புலிகளின் விமானத் தாக்குதலை இந்தியா அளித்த ரேடார்களினால் கண்டறிய இயலவில்லை எனக் கூறி சீனாவிடம் ரேடார்களை இலங்கை அரசு பெற்றுக் கொண்டது. அதிக சக்தி வாய்ந்த இந்த ரேடார்கள் மூலம் இந்திய விமானப் படையின் நடமாட்டங்களையும் உளவறிய சீனாவுக்கு வழிவகுக்கப்பட்டது.

2008-ம் ஆண்டில் மட்டும் இலங்கைக்கு சீனா ரூ. 500 கோடி உதவி அளித்துள்ளது. இந்தியாவையும் ஜப்பானையும் விட பன்மடங்கு அதிக நிதி வழங்கிய நாடாக சீனா திகழ்கிறது. கடந்த காலத்தில் சீனாவிடமிருந்து ஆயுதங்கள் வாங்கிய வகையில் இலங்கை அரசு 100 கோடி ரூபாய் கடன்பட்டிருந்தது. அந்தக் கடனையும் சீனா தள்ளுபடி செய்தது.

சீனா மட்டுமல்ல, சீனாவின் நட்பு நாடுகளான பாகிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகளும் இலங்கைக்கு ராணுவ ரீதியான உதவிகளை அளிக்க முன்வந்தன. இதற்குப் பின்னணியில் சீனா இருந்தது என்பது வெளிப்படையானது.

2006-ம் ஆண்டு பாகிஸ்தான் அரசு இலங்கைக்கு ரூ. 300 கோடி மதிப்புள்ள ஆயுத உதவிகளை அளித்தது. இதற்குப் பதில் உதவியாக இலங்கை அரசு இந்தியாவுடன் செய்து கொண்டதைப் போல பாகிஸ்தானுடனும் சுதந்திர வணிக உடன்பாடு ஒன்றைச் செய்து கொண்டது.

தென் இலங்கையில் உள்ள உமா ஆற்றில் 100 மெகாவாட் திறனுக்கான நீர்மின் நிலையம் அமைப்பதற்காகவும் கொழும்புக்கு அருகே உள்ள சபுஸ்கந்தா பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையத்தை விரிவாக்குவதற்கும் உரிய உரிமங்களை ஈரானுக்கு அளிக்க இலங்கை அரசு முன்வந்தது. பதிலுக்குப் பெருந்தொகை ஒன்றை ஈரான் உதவி நிதியாக வழங்கியது. சீனாவின் ஆதரவு நாடான ஈரானை நட்பு நாடாக்கிக் கொண்டால் சீனா தன்னுடன் இன்னும் நெருக்கமாக வருமென இலங்கை அரசு கருதியது.

சீனாவுடனும் அதன் கூட்டாளிகளுடனும் கூட்டு வைத்துக் கொள்வதன் மூலம் மட்டுமே புலிகளுக்கு எதிரான ராணுவ வெற்றிகளை அடைய முடியும் என இலங்கையை உணரச் செய்வதே சீன அரசின் நோக்கம் என்பதையும் அந்த நோக்கத்தில் அது வெற்றி பெற்றுவிட்டது என்பதையும் இந்தியா உணரவே இல்லை.

இதன் விளைவாக நான்காம் ஈழப்போர் தொடங்கிய 2006ம் ஆண்டு ஜூலை 26-ம் தேதியிலிருந்து இலங்கை மண்ணுக்குள் சீனாவின் காலடித்தடங்கள் ஆழமாகப் பதிந்துவிட்டன. சீனாவின் நண்பர்களுக்காகவும் இந்தியாவைப் பகைத்துக் கொள்ள இலங்கை தயாராகிவிட்டது. இலங்கையரசின் சீன உறவின் விளைவாக இந்தியாவிற்கு ராணுவ ரீதியாக பெரும் அச்சுறுத்தல்கள் உருவாகிவிட்டன. பாகிஸ்தானுடன் சீனா கொண்டுள்ள நெருக்கமான உறவு வட இந்தியாவுக்கு பெரும் அபாயமாக விளங்குகிறது. அதே அளவுக்கு இப்போது உருவாகியிருக்கும் இலங்கை-சீன உறவு எதிர்காலத்தில் தென்னிந்தியாவிற்குப் பெரும் சவாலாக விளங்கும் என்பதில் ஐயம் இல்லை.

ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த தொழிற்சாலைகள், ஏவுகணைத் தளங்கள், அணு உலைகள் ஆகியவற்றை வட இந்தியாவில் அமைத்தால் பாகிஸ்தான், சீனா ஆகியவற்றின் தாக்குதலுக்கு ஆளாகி அழியும் அபாயம் இருப்பதால் அத்தகைய தொழிற்சாலைகளைத் தென்னிந்தியாவில் அமைப்பது பாதுகாப்பானதென பிரதமர் நேரு கருதி அவ்விதம் செய்தார். தொடர்ந்து வந்த இந்தியப் பிரதமர்களும் இக்கொள்கையைப் பின்பற்றினார்கள். ஆனால் அதற்கும் இப்போது இலங்கை -சீனா -பாகிஸ்தான் அரசின் மூலம் அபாயம் தோன்றிவிட்டது.

இலங்கையரசுக்கு சீன அரசு ராணுவ ரீதியில் உதவி வருவது எதிர்காலத்தில் வணிக நலன்களை கருதி அல்ல. இந்தியா அமெரிக்காவுடன் கொண்டுள்ள கூட்டணியின் விளைவாக இந்துமாக்கடல் பகுதியிலும் அதனைச் சுற்றியுள்ள நாடுகளிலும் தான் தனிமைப்பட்டுவிடக்கூடாது எனக் கருதுவதனாலேயேயாகும். ராணுவம் மற்றும் பொருளாதார ரீதியில் இப்பகுதியில் உள்ள இலங்கை, நேபாளம், வங்கதேசம், மியான்மர், மலேசியா ஆகிய நாடுகளுடன் மிக நெருக்கமான உறவை சீனா வளர்த்து வருகிறது. ஏற்கெனவே பாகிஸ்தான், ஈரான் ஆகியவை சீனாவின் கூட்டாளிகளாகிவிட்டன.

20 வருடங்களுக்கு முன்பாக இப்பகுதியில் இந்தியா மட்டுமே ஒரே ஒரு மேலாதிக்க நாடாக விளங்கியது ஆனால் இப்போது இந்தியாவின் பிராந்திய நலன்களுக்குட்பட்ட பகுதிகளில் சீனா நுழைந்துவிட்டது.

இந்துமாக்கடலில் இயற்கையாக முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இலங்கை உள்ளது. நிலவியல் அடிப்படையில் அது நடுமையமான இடத்தில் அமைந்துள்ளது. இந்துமாக்கடல் வழியே செல்லும் விமானத்தடங்களுக்கும், கப்பல் தடங்களுக்கும் இலங்கையே நடுமையமாக உள்ளது. எனவே இந்தியாவின் பாதுகாப்பு இலங்கையைப் பொருத்து அமைந்துள்ளது. ஆனால் இதுகுறித்து இலங்கை கவலைப்பட்டதில்லை. இந்தியாவின் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் வகையில் மற்ற நாடுகளுடன் உறவாடவும், உடன்பாடுகள் செய்துகொள்வதற்கும் இலங்கை ஒருபோதும் தயங்கியதில்லை.

இலங்கையின் இந்தப் போக்கினை கண்ட இந்தியக் கடற்படையின் முன்னாள் தளபதியான ரவி கவுல் என்பவர் “இந்துமாக்கடலும் இந்தியாவின் முக்கியத்துவம் வாய்ந்த நிலையும்’ என்னும் தலைப்பில் எழுதியுள்ள நூலில் பின்வருமாறு கூறியுள்ளார்.

“பிரிட்டனின் பாதுகாப்புக்கு அயர்லாந்து எவ்வளவு முக்கியமானதோ, சீனாவின் பாதுகாப்புக்கு தைவான் எவ்வளவு இன்றியமையாததோ அதைப்போல இந்தியாவின் பாதுகாப்புக்கு இலங்கை மிக முக்கியமானதாகும். இந்தியாவின் நட்பு நாடாக அல்லது நடுநிலை நாடாக இலங்கை இருக்கும் வரை இந்தியா கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால் இந்தியாவுக்கு எதிரான நாடுகளின் வசத்தில் இலங்கை சிக்குமானால் அந்த நிலைமையை இந்தியா ஒருபோதும் சகித்துக் கொள்ளமுடியாது. ஏனென்றால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அதனால் அபாயம் நேரிடும்’.

அமெரிக்காவுடன் இந்தியா செய்துகொண்ட அணுசக்தி உடன்பாட்டின் விளைவாக விரிவடையப்போகும் இந்தியாவின் பிராந்திய ஆதிக்க வலிமையானது எதிர்காலத்தில் தனக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறும் என்ற கலக்கம் சீனாவுக்கு உள்ளது. இந்தியாவில் ராணுவ, பொருளாதார முக்கியத்துவம்மிக்க பகுதியாக மாறிவரும் தென்னிந்தியாவின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு இலங்கை தனது முழுமையான கட்டுபாட்டிற்குள் வரவேண்டும் என்பது இந்தியாவின் அவசியத் தேவை என்பதை சீனா புரிந்து கொண்டுள்ளது.

இலங்கையில் தமிழர் பகுதிகளை சிங்கள ராணுவம் தனது ஆதிக்கத்தின் கீழ்கொண்டுவருவதற்கும், விடுதலைப்புலிகளை ஓரங்கட்டுவதற்கும், தான் அளித்த உதவியினால் எதிர்காலத்தில் இலங்கை தனது கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட ஒரு நாடாக இருக்கும் என இந்தியா கருதியது குறுகிய காலத்திலேயே பகற்கனவாய் போய்விட்டது. தனது நோக்கம் நிறைவேறியவுடன் இந்தியாவைத் தூக்கியெறிய இலங்கைத் தயங்கவில்லை. இந்தியாவின் தயவு இனி இலங்கைக்குத் தேவையில்லை. இரு அணு ஆயுத வல்லரசுகளான சீனாவும், பாகிஸ்தானும் இலங்கைக்கு உறுதுணையாக நிற்கின்றன.

இலங்கை அதிபர் ராஜபட்சவின் தம்பியும், பாதுகாப்பு ஆலோசகருமான கோத்தபய ராஜபட்ச கட்டுப்பாட்டில் உள்ள இணையதளத்தில் அவரின் நண்பர் ஜெயசூரியா என்பவர் எழுதியுள்ள கட்டுரையில் இந்தியாவைப் பற்றி மிகவும் கடுமையான விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.

“ஈழத்தமிழர்களுக்கு சமவுரிமை வழங்கவேண்டுமென்று எங்களுக்கு ஆணையிட இந்தியாவுக்கு உரிமையில்லை. இந்தியாவிலுள்ள அனைத்து தலைவர்களும், அரசதிகாரிகளும் இலங்கைக்கு ஆணைகளைப் பிறப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். அண்மையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவும் தமிழர்கள் உள்பட அனைத்து சமூகத்தினருக்கும் அதிகாரம் அளிப்பதன் மூலமே இனப்பிரச்னைக்கான அடிப்படைக் காரணங்களை சரிசெய்திட முடியும் என்று கூறியிருக்கிறார். அவரிடம் நாங்கள் கேட்பது என்னவென்றால் இந்த அறிவுரையைக் கூற நீங்கள் யார்? உங்களுக்கு என்ன தகுதி உள்ளது? இறையாண்மை மிக்க நாடான இலங்கைக்கு எப்படி ஆட்சி செய்ய வேண்டுமென்பது தெரியும். நீங்கள் உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்.

தமிழர்களுக்கு எவ்வித அதிகாரங்களையும் வழங்கமாட்டோம். ஏனெனில் அவர்கள் தனிநாடு கேட்டுப் போராடுவதற்கு அதுவே வாய்ப்பாகிவிடும். அதுமட்டுமல்லாது இந்தியாவால் எங்கள் மீது திணிக்கப்பட்ட உடன்பாட்டையும் தூக்கியெறிவோம். அதன் மூலம் இந்திய ஆதிக்கத்தின் கடைசி அடையாளங்களையும் துடைத்தெறிவோம்.

எங்கள் நாட்டை இந்தியாவுடன் இணைத்துக்கொள்ளும் நோக்கத்துடன் நீங்கள் விடுதலைப்புலிகளை உருவாக்கினீர்கள். நீங்கள் உருவாக்கியதை நாங்கள் அழித்துவிட்டோம்.’

கோத்தபய ராஜபட்சவின் இணையதளத்தில் வெளிவந்துள்ள இந்தக் கட்டுரை, அதிபர் ராஜபட்சவின் சம்மதம் இல்லாமல் வெளிவந்திருக்க முடியாது. இலங்கை அரசின் அதிகாரப்பூர்வமான கருத்தையே இந்தக் கட்டுரை எதிரொலிக்கிறது.

இலங்கையில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களைக் கொன்று குவிக்கவும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை மின்வேலி முகாம்களுக்குள் அடைத்துச் சித்திரவதை செய்யவும், சிங்கள இனவெறி அரசுக்கு எல்லாவகையிலும் துணை நின்ற இந்திய அரசுக்கு கிடைத்த கைமாறு இதுதான். இத்துடன் நிற்கப்போவதில்லை. இந்தியாவின் பகை நாடுகளான சீனாவும், பாகிஸ்தானும் இலங்கையில் வலுவாகக் காலூன்றிவிட்ட நிலையில் தென்னிந்தியாவிற்கு எதிர்காலத்தில் ஏற்படப்போகும் அபாயத்திலிருந்து இந்தியா மீள்வதற்கு வழி உண்டா? என்ற கேள்விக்குரிய விடை இந்தியாவிடம் இல்லை.

இலங்கையில் சிங்கள இனவெறிக்கெதிராக நடைபெற்ற போரில் ஈழத் தமிழர்களோ, புலிகளோ தோற்கவில்லை. மாறாக இந்தியாவின் ராஜதந்திரம்தான் படுதோல்வியடைந்திருக்கிறது!

நன்றி: தினமணி

Related Posts Title

Thursday, June 18, 2009

N 97

3:03 PM by devaraj · 0 comments
vedio

இலங்கை நிலவரம் - ஒரு பார்வை


தமிழ்மணம் பரிந்துரை : 6/8
Pathivu Toolbar ©2009thamizmanam.com

இலங்கை நிலவரம் - ஒரு பார்வை

சிந்திய பாலைப்பற்றிச் சிந்திக்காதே” இது ஓர் ஆங்கிலப் பழமொழி. சரி. ஆனால் பசியில் குழந்தை அழுமே அதற்கு என்ன பதில் சொல்வது...? - சிந்திக்க வேண்டியதிருக்கிறதே.

ஈழத்தமிழர் பிரச்னையிலும் ‘நடந்தது நடந்து விட்டது இனி நடக்க வேண்டியது என்ன?’ சிலர் யதார்த்தமாக சிந்திப்பதாக எண்ணிக் கொண்டு கேட்கிறார்கள்.
‘இதற்கு மேலும் இனி என்ன நடக்க வேண்டும்?’ கொதித்துப்போய் சிலர் எழுப்பும் குமுறல் கலந்த கேள்வி இது

பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா, இல்லையா? - பதில் தெரியாது. ஆனால் அவருடையது என்று அரசு காட்டிய உடல் அவரது அல்ல. 2002 ல் நான் நேரில் அவரைச் சந்தித்த போது கூட படத்தில் காட்டப்படுவது போல் அவர் இவ்வளவு இளமையாக இல்லை. ஆறு ஆண்டுகளில் வயது போய் இருக்குமா வந்திருக்குமா ?

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவருடையது என்று சொல்லப்படும் அந்த உடலை புதைக்கக் கூட இல்லை. ஏன் எரித்தார்கள்? மனிதர்கள் பதில் சொல்ல மறுக்கலாம். காலம் சொல்லாமல் போய் விடுமா என்ன ? சொல்லும். சொல்லி இருக்கிறது.

இட்லரும் முசோலினியும் சரித்திரத்தில் இடம் பெற்றிருக்கிறார்கள். உயர் மனிதர்களாக அல்ல; இழி பிறவிகளாக...! சரித்திரத்துக்கு திரும்பும் ஒரு கெட்ட குணம் உண்டு. அது மோசமாகத் திரும்பும்.

விறகு அடித்த கம்பு மேலும் கீழும் என்பார்கள். காட்டில் விறகு பொறுக்குபவர்கள், பொறுக்கிய விறகை ஒரு விறகால் அடித்து, அடித்து கட்டைச் சரிப்படுத்துவார்கள். கடைசியாக அடித்த கம்பை மேலே வைத்துக் கட்டி தலையில் சுமந்து செல்வார்கள். போட வேண்டிய இடத்தில் ‘தொபுக் கடீர்’ என்று போடும்போது அடித்த கம்பு அடியிலும் அடிபட்ட கம்புகள் மேலேயும் இருக்கும். மனித சரித்திரத்தின் வழி நெடுகிலும் காணக் கூடியது இத்தகைய காட்சிகள் தான்.

வினை விதைத்தவன் தினை அறுக்க மாட்டான் என்பது வெறும் ஒரு வெற்றுச் சொற்றொடர் அல்ல. பட்டுத் தெளிந்தவர்கள் விதைத்துச் சென்ற தத்துவ வித்து அது... ஆகவே, கலைஞர் ஈழத்தமிழர்களுக்கு உதவினாரா அல்லது அவர்களை உதறினாரா என்ற ஆராய்ச்சி இப்போது தேவை இல்லை. ராஜபக்‌ஷ கொற்றவரா அல்லது கொடியவரா என்ற கேள்விக்கான பதிலை காலத்திடம் விட்டு விடுவோம். ஆக வேண்டிய பணிகள் என்ன? அதை ஆக்க பூர்வமாகச் செய்வதெப்படி என்பதில் கவனம் செலுத்துவது காரியமாற்றவும் - காயங்களை ஆற்றவும் பயன்படும்.

இலங்கையின் பரப்பளவு 25,000 சதுர மைல்கள். அதில் சிங்கள மக்கள் வாழும் பகுதி 15,000 ச.மை. தமிழர்கள் வாழ்ந்த பகுதி 10,000 ச.மை. கல்-ஓயா நீர்த்தேக்கத்தை கட்டி அம்பாரை மாவட்டத்தில் சிங்களவர்களை வலிய குடியேற்றியபோது இழந்தவை, கடலில் சென்று வீழ்ந்த மஹாவெலி கங்கை வட மேற்கு மாகாணத்துக்கு திருப்பி விடப்பட்ட போது குடியமர்த்தப்பட்ட சிங்களவர்களால் கைவிட்டுப் போனவை, பல லட்சம் பேர் புலம் பெயர்ந்ததால் ஏற்பட்ட இழப்புகள் எல்லாம் சேர்ந்து கரையான் அரித்த பாயாகி இருக்கிறது தமிழர் பிரதேசம்.

கொழும்பு மத்திய தொகுதியில் வாக்காளர்களுக்கு மூன்று வாக்குகள். அதன் மூலம் இரண்டு சிறுபான்மையினர் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்ந்தார்கள். இந்தப் பகுதியில் “தோட்டம்” எனப்படும் ஏழைகள் வசிக்கும் குடியிருப்புகள் அதிகம்.
அத்தகைய இடங்களைப் பிரேமதாச அரசு கையகப்படுத்தும். நூறு குடும்பங்கள் குடியிருந்த அந்த இடத்தில் நானூறு வீடுகள் கொண்ட பல அடுக்கு மாளிகை
கட்டப்படும். கட்டி முடிந்ததும் மிகச் சரியாக அந்த நூறு குடும்பங்களுக்கும் வீடுகள் ஒதுக்கப்படும். அதை பிரேமதாச மிக நேர்மையாகச் செய்தார். சூட்சுமம் எங்கே என்றால் மீதமுள்ள முன்னூறு குடி இருப்புகளிலும் அரசு தனக்கு இஷ்டப்பட்டவர்களை குடியேற்றியது. கொழும்பு மத்திய தொகுதி தன் தனித்தன்மையை இழந்து விட்டது.

வடபுலத்தில் வீடிழந்தவர்கள் எந்த இடத்தை தன்னுடையது என்பார்கள். இரண்டு பக்கமும் கட்டிடங்கள் இருந்து நடுவில் வீதியும் இருந்தால், ஏழாம் இலக்கம் என்னுடையது எட்டாம் இலக்கம் உன்னுடையது என்று உரிமை கொண்டாடலாம். எல்லாமே கட்டாந்தரையாகக் கிடந்தால் எதை வைத்து அடையாளம் காண்பது?

உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு கோவணத்தையே காணாமல் ஓடிக் கொண்டிருந்தபோது எந்த ஆவணத்தை இவர்கள் கையில் எடுத்துக் கொண்டு போயிருக்கப்போகிறார்கள். எந்த அரசு அலுவலகம் இருந்தது அல்லது இருக்கிறது - அவற்றில் தேடிக் கண்டு பிடிக்க. அப்படியே முடியும் என்றாலும் அரசு எந்தக் காலத்தில் இப்போதிருக்கும் முகாம்களிலிருந்து இவர்களை தங்கள் மண்ணுக்குச் செல்ல அனுமதிக்கப் போகிறது.

‘தமிழர் பூமி’ என்ற அடையாளத்தை அழிக்கும் வண்ணம் சிங்களவர்களைக் கொண்டு அங்கு குடியேற்ற மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம். இது என் நிலம் என்று உறுதிப்படுத்தும் ஆவணம் இல்லாதவரை அது அரசு பூமிதான். அந்த பூமியில் அரசு விரும்பும் மக்களை குடியமர்த்தினால் யாரால் என்ன செய்ய முடியும்.

‘ஒன்று பட்ட இலங்கை...இறையாண்மை...இந்த நாட்டின் குடி மகனுக்கு நாட்டின் எந்தப் பகுதியிலும் குடியேற உரிமை உண்டு’ என்ற வறட்டுத் தத்துவங்களை தங்களது துணைக்கு அழைக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?

அப்படிப்பட்ட ஓர் அபாயம் ஈழத் தமிழர்களை எதிர் நோக்கவில்லை என்று சொல்ல முடியுமா? சுதந்திரக் காற்றைத்தான் சுவாசிக்க முடியவில்லை. சொந்த மண்ணில் வாழும் உரிமைகூட இல்லாமல் போகுமா?

இலங்கையில் நடைபெற்றது இன அழிப்பா, தீவிரவாத ஒழிப்பா என்பதை, சமத்துவமும், சமதர்மமும் பேசும் சீனாவும், ரஷ்யாவும் தங்கள் மனசாட்சியைத் தொட்டு பதில் சொல்லும் தார்மீகக் கட்டாயத்துக்குத் தள்ளப் பட்டிருக்கின்றன.

இந்தியா எந்த வகையிலும் உதவவில்லை என்று சாதிக்கிறது. அப்படியே வைத்துக் கொண்டாலும் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தது என்ன நியாயம் என்று இந்த நாட்டின் சாமான்ய குடிமகன் கேட்கும் கேள்விக்கு இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்.

கலைஞர் ஈழத்தமிழர்களுக்காக இயன்றதை எல்லாம் செய்தார் என்பதை வாதத்துக்காக அல்ல உண்மை என்றே கூட ஒப்புக்கொள்ளத் தயார் ஒரே ஒரு கேள்வியுடன் – அதனால் ஈழத்தமிழர்களுக்கு இம்மியளவேனும் நன்மை விளைந்ததா? - அவருக்கு நன்கு பரிச்சயமான கடிதத்திலோ அல்லது கவிதையிலோ கூட பதில் சொல்லலாம்.

ஓர் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் உளம் நொந்து - வெந்து சொன்ன ஒரு வாக்கு: “ ஐயா நாங்கள் வயிற்றுக்குச் சோறு கேட்டோம். ஆனால் நீங்கள் வாய்க்கு அரிசி போட்டிருக்கிறீர்கள்” நம்மைச் சுடுகிறது ஐயா, சுள்ளென்று உரைக்கிறது. உதவத் தவறி விட்டோமோ என்று உள்ளம் கிடந்து குமைகிறது.

தான் செத்து மீன் பிடிக்கக் கூடாது என்ற தற்காப்பை - தன் நிலை நிற்பை அரசியல்வாதிகள் உறுதி செய்து கொள்வதில் - கடைபிடிப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அது தலையாய விதி. ஆனால் மக்களின் தலை விதியை மற்றி எழுத இந்த விதியை உடைத்தெறிவது குற்றமோ, பாபமோ அல்ல.

சம்பந்தப்பட்ட அனைவருக்கும் சராசரி அரசியல்வாதி (Politician) என்ற நிலையிலிருது விடுபட்டு, ஓர் உன்னத ராஜதந்திரியாக (Statesman) உயரும் ஒரு பொன்னான வாய்ப்பை காலம் அவர்கள் காலடியில் கொண்டு கிடத்தி இருக்கிறது. ஈழத் தமிழர் உரிமைகளுக்கு உயிர் பெற்றுக் கொடுங்கள். உயிர்வாழ உரிமை பெற்றுக் கொடுங்கள். அந்த உன்னதப் பணிக்காக உலகம் உங்களைப் போற்றும், காலம் உங்களை வாழ்த்தும்.

சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்

Saturday, June 13, 2009

இன்டர்நெட்டில் உலவும் போது சில தளங்கள் திறந்தபின் error வருகிறது

1:40 PM by devaraj · 2 comments

























screen capture செய்து இணைத்து உள்ளன் ப்ளீஸ் உதவவும்